விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. சில தினங்களாக போட்டியாளர்களின் குடும்ப நபர்கள் வந்து செல்கின்றனர். ஷிவானியை பார்க்க அவரது தாய் வந்ததோடு, பெற்ற மகளை நிகழ்ச்சி என்ற கூட பார்க்காமல் விளாசி தள்ளிவிட்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் நடந்து கொண்ட விதம், பாலாஜியின் பின்னால் சுற்றியது போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி அவரை திட்டினார். இந்த நிகழ்வு சமூகவலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது.
இதுப்பற்றி பாடகி சின்மயி சமூகவலைதளத்தில், ''இந்த நிகழ்ச்சியை நான் பார்ப்பது கிடையாது. ஆனால் ஒருவர் எனக்கு இதுப்பற்றி என்னிடம் கூறினார். தாயே தன் மகளை அசிங்கப்படுத்தியது தவறாக தெரிகிறது. சின்ன விஷயத்திற்கு கூட மகள்களை விலைமாது போன்று நடத்தும் பழக்கம் இந்திய பெற்றோர் சிலரிடம் உள்ளது. யாரை மயக்க பாக்குற, எவன் பின்னாடி சுத்துற என அம்மாக்களே கேட்கிறார்கள். ஊர்ல 4 (உதவாக்கர) பேர் என்ன சொல்வாங்க என்பது தான் பெற்றோர்கள் தங்கள் மகள்களையே அசிங்கப்படுத்த காரணம். இதுபோன்று செய்யாதீர்கள், பொறுப்பாக பேசுங்கள் என பதிவிட்டுள்ளார்.