விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
பிரபல போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே, 27. தீவானாபேன் என்ற போஜ்புரி படத்தில் நடித்தார். சில ஹிந்தி படங்கள் மற்றும் டிவி ஷோக்களிலும் நடித்துள்ளார். கணவர் சந்திரமணி ஜன்கட் உடன் மும்பையில் இவர் வசித்து வந்தார். தனது சகோதரியின் திருமணத்திற்காக பீஹாரில் உள்ள பாகல்பூருக்கு வந்திருந்தார். குடும்பத்தினர் உடன் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கிய நிலையில் மின்விசிறியில் தூக்கிட்டு அம்ரிதா தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தற்கொலை செய்வதற்கு முன் அம்ரிதா தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில், ‛‛அவளது வாழ்க்கை இரு படகுகளில் இருக்கிறது. என் படகை மூழ்கடித்து அவள் வாழ்க்கையை எளிதாக்கினேன்'' என குறிப்பிட்டுள்ளார்.
அம்ரிதாவின் தற்கொலை பற்றி குடும்பத்தினர் கூறுகையில், போதிய பட வாய்ப்பு இல்லாததால் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார். அதனால் கூட தற்கொலை செய்திருக்கலாம் என்கிறார்கள்.