விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
தனது தாயார் பெயரிலும், ராகவேந்தர் பெயரிலும் அறக்கட்டளை நடத்தி வரும் ராகவா லாரன்ஸ் தற்போது 'சேவையே கடவுள்' என்ற பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றை தொடங்கி உள்ளார். இதில் நடிகர், இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்துள்ளார். இவர்களுடன் கலக்கப்போவது பாலா, செப் வினோத், அறந்தாங்கி நிஷா இணைந்து செயல்படவுள்ளனர்.
இந்த அறக்கட்டளை மூலம், முதற்கட்டமாக விவசாயிகளுக்கு பயன்படும் வகையில், 10 டிராக்டர், 10 ஊர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த ஊர்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் பயன்பாட்டுக்கு இந்த டிராக்டரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த விழாவில் ராகவா லாரன்ஸ் பேசியதாவது: 2 மாதம் முன்பு எனக்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. கோவிலுக்கு போய் வந்த நாள், ஒரு கனவு அதை நினைத்து கண்களில் தானாக கண்ணீர் வந்தது. அதுதான் இந்த மாற்றத்தின் துவக்கம். நான் அதைச் செய்யப் போகிறேன். இதைச் செய்யப்போகிறேன் என சொல்ல மாட்டேன், செய்துவிட்டு சொல்கிறேன்.
எஸ்.ஜே.சூர்யா சினிமாவில் மட்டுமல்ல இந்த பணியிலும் என்னுடன் இணைந்துள்ளார். இது கடவுளின் ஆசிர்வாதம். இணைந்து பயணிப்போம். என்னை இந்தளவு வளர்த்தெடுத்தது என் தாய் தான். சின்ன வயதில் என் அம்மா, என்னை எம் ஜி ஆர் மாதிரி வளர்ப்பேன் என்றார். அப்போது எல்லோரும் சிரித்தார்கள். ஆனால் எம் ஜி ஆர் அளவு இல்லையென்றாலும் அவரில் சிறியளவிலாவது நான் செயல்படுவேன். என்றார்.