விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
படம் : வேட்டையாடு விளையாடு
வெளியான ஆண்டு : 2006
நடிகர்கள் : கமல், ஜோதிகா, கமலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ்
இயக்கம் : கவுதம் வாசுதேவ் மேனன்
தயாரிப்பு : மாணிக்கம் நாராயணன்
மின்னலே, காக்க காக்க என, ஹிட் கொடுத்த இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், மூன்றாவதாக கமலுடன் இணைந்து வேட்டையாடு விளையாடு என, களமிறங்கி, ஹாட்ரிக் வெற்றிக் கொடுத்தார். காக்க காக்க படத்தின் மூலம், ஸ்டைலிஸ் போலீஸ் கதாபாத்திரத்தை, இயக்குனர் அறிமுகப்படுத்தி இருந்தார். இப்படத்திலும், அதே போன்ற பாத்திர படைப்பு தான் இடம்பெற்றிருந்தது.
தசாவதாரம் கதையை, கவுதம் தான் இயக்க வேண்டும் என, கமல் விரும்பினார். ஆனால், தன் பாணியில் படம் இயக்குவேன் என, கவுதம் கூறியதால், வேட்டையாடு விளையாடு உருவானது. பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொடூரமாக கொலை செய்யும் இரண்டு சைக்கோ வில்லன்களை, போலீஸ் அதிகாரியான கமல், வெளிநாடு சென்று எப்படி துப்பறிகிறார் என்பது தான், படத்தின் திரைக்கதை.
கமல், டி.ஜி.பி., ராகவனாகவே உருமாறியிருந்தார். அவரின் உடல்மொழி அவ்வளவு அழகு. 'என் கண்ணு வேணுமுன்னு கேட்டியாமே...' என்பது முதல், 'சின்ன பசங்களா யாருகிட்ட...' என்பது வரை, கமலின் நடிப்பு, 'வவ்'ரகம்.
கமலினி முகர்ஜியும், கண்ணுக்கு குளுமையாக இருந்தார். ஒரு குழந்தைக்கு தாயாகவும், விவகாரத்து ஆனவராகவும் ஜோதிகாவின் பாத்திர படைப்பு அருமையாக இருந்தது. ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களும், தாமரையின் வரிகளும், படத்தின் வெற்றிக்கு, முக்கிய காரணமாக இருந்தது.
'சைக்கோ' கொலைக்காரர்களாக டேனியல் பாலாஜியும், சலீம் பேக்யும் மிரட்டியிருந்தனர். சென்னை, கோவா, மதுரை, நியூயார்க் என, ரவிவர்மனின் கேமரா, ஓவியம் தீட்டியிருந்தது. கவுதம் வாசுதேவ் மேனனின், படங்களின் தலைப்பும், கதாபாத்திரங்களின் பெயர்களும் துாய தமிழில் இருக்கும்; ஆனால் வசனங்கள், ஆங்கிலத்தில் இருக்கும். இப்படத்திலும் அதே கதை தான்.
வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என, கவுதம் கூறியிருந்தார். நாங்கள் காத்திருக்கிறோம், ப்ரஸ் ஆன ராகவனை மீண்டும் பார்க்க!
குற்றவாளிகளை வேட்டையாடு விளையாடு!