ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
எஸ்.பி. சரண் தயாரிப்பில், மதுமிதா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் மூணே மூணு வார்த்தை. இந்த படத்தின் மூலம் கார்த்திகேய மூர்த்தி, இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். 4 பாடல்கள் மற்றும் 3 தீம்கள், இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன. படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை, சிங்கிள் டிராக்குகளாக, 2 வாரங்களுக்குள்ளாக, வெவ்வேறு நேரங்களில் வெளியிட தயாரிப்பாளர் சரண் திட்டமிட்டுள்ளார். இதன் முதற்கட்டமாக, முதல் சிங்கிள்டிராக்கை, வரும் 7ம் தேதி, சென்னை பீனிக்ஸ் மாலில், எஸ்.பி.பாலசுப்ரமணியன் வெளியிடுகிறார்.
சிங்கிள் டிராக்கை, எஸ்.பி. பாலசுப்பிரமணியன் வெளியிடுவதோடு மட்டுமல்லாது, வாழும் நாள் என்ற பாடலையும் அந்நிகழ்ச்சியில் பாட உள்ளார். இசை வெளியீட்டு நிகழ்ச்சியில், எஸ்.பி.பி. பாட்டு பாட இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.