விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
மோகன்லால் மலையாளத்தில் தற்போது தன்னுடைய 360வது படத்தில் நடித்து வருகிறார். 15 வருடங்களுக்கு பிறகு நடிகை ஷோபனா மோகன்லாலுடன் இணைந்து நடித்து வரும் இந்த படத்தை இயக்குனர் தருண் மூர்த்தி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் கொச்சியில் சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் மோகன்லால் கலந்து கொண்டார்.
அப்போது மேடையில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தில் அனிருத் இசையில் ஹிட்டடித்த ஜிந்தா பந்தா என்கிற பாடலுக்கு நடன கலைஞர்களுடன் சேர்ந்து நடனம் ஆடினார். அது மட்டுமல்ல ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ரஜினிகாந்தின் ஹுக்கும் பாடலுக்கும் மேடையில் பெர்பார்மன்ஸ் செய்து அசத்தி ரசிகர்களின் கைதட்டலை அள்ளினார் மோகன்லால்..
தனது பாட்டிற்கு மோகன்லால் நடனம் ஆடியது குறித்து ஷாருக்கான் கூறும்போது, “இந்த பாடலை எனக்கு இப்பொழுது இன்னும் அதிக ஸ்பெஷலாக மாற்றியதற்காக நன்றி மோகன்லால் சார். நீங்கள் ஆடியதில் பாதியாவது சிறப்பாக நான் ஆடி இருந்திருக்கலாம். லவ் யூ சார். எனது வீட்டில் உங்களுக்கு விருந்தளிக்க காத்திருக்கிறேன். நீங்கள் தான் இந்த ஜிந்தா பந்தாவின் ஓ ஜி” என்று கூறியுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள மோகன்லால், “உங்களைப் போல ஒருவராலும் ஆட முடியாது ஷாருக். நீங்கள் தான் எப்பொழுதும் ஜிந்தா பந்தாவின் ஓ ஜி ஆக இருப்பீர்கள். உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி. டின்னரை பற்றி கேட்கிறீர்களா ? நாம் ஏன் ஜிந்தா பந்தா பாடலை நமது காலை உணவின் போது சேர்ந்து பாடக்கூடாது ?” என்று பதில் அளித்துள்ளார்.